திரு. கெங்காதரம்பிள்ளை அம்பலவாணர்
(Retired Chief Accountant - Northern Ministry of Health and Education)
தோற்றம்: 07 அக்டோபர் 1940 - மறைவு: 30 ஜூன் 2023
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை அம்பலவாணர் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்(குணமாலை ஆசிரியர்), பாக்கியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரன், ஔவை, ஓவியா, இனியா, இலட்சியா, மாதுமை ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, தியாகராசா(ஆசிரியர்), நல்லம்மா(ஆசிரியை), செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பாள் செல்வதுரை, சதாசிவம்(முத்துத்துரை), தெய்வநாயகி, பத்மநாதன், கணேசபிள்ளை மற்றும் நகுலேசபிள்ளை, சிவசாமி, கனகலட்சுமி சண்முகநாதன், முருகபூபதி, ராசலட்சுமி தர்மலிங்கம், சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம், சிவசேகரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சாரதாம்பாள்(வேலணை) தம்பதிகள், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
