திருமதி. கேந்திரநாதன் ஜெயந்தி
(ஆசிரியை - யாழ். வடமத்திய மகளிர் கல்லூரி - வதிரி, கரவெட்டி)
மறைவு: 06 அக்டோபர் 2025
யாழ். அல்வாய் கிழக்கு பெரியார் பகுதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேந்திரநாதன் ஜெயந்தி அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயகாந்தன், ஜெயசந்திக்கா, ஜெகன், ஜெயபிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிரோமி, பிரதீபன், யசோதா, மதன்லால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிகேஸ், கர்ஷா, அஞ்சலி, அபினி ஆகியோரின் அன்பு மாமியரும்,
அக்சயன், அக்சயா, ஆதவி, இனியன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் சுப்பர் மடம் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
