திரு. கந்தையா மயில்வாகனம்
(முன்னாள் தலைவர் - அருள்மிகு நாச்சி அம்பாள் தேவஸ்தானம், இருபாலை முன்னள் தலைவர் தற்போதைய நிர்வாக உறுப்பினர்-பாரதி கலாமன்றம் இருபாலை)
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1940 - மறைவு: 19 ஏப்ரல் 2024
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற தம்பிராசா - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
மதிபரன் (பிரான்ஸ்), துவாரகா, மைதிலி, திரிவேணி, கரிபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா (பிரான்ஸ்), சுரேஸ், சாந்தகுமார், தரணிகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அக்ஷயா (பிரான்ஸ்), ஆதித்யா (பிரான்ஸ்), சதுர்திகா, சாகித்தியா, சர்வாயினி, ப்ரித்விகா, கருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் அன்னலட்சுமி, நாகலட்சுமி, ஜெயலட்சுமி (டென்மார்க்), மகேந்திரராஜா (உரிமையாளர் - லக்கி ஸ்டோர்ஸ், இருபாலைச்சந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா, ரவீந்திரன், திருநாவுக்கரசு (டென்மார்க்), பாமினி (ஆசிரியர் - நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜதுமிலன், வானதி, பிருந்தாபன் ஆகியோரின் பெரியப்பாவும்,
செல்வேந்திரகுமாரி (ஜேர்மனி), மாவீரன் இராஜேந்திரகுமார், ஜிதேந்திரகுமார் (லண்டன்), செல்வகேந்தினி (வவுனியா ), ரவிசாந் (அவுஸ்திரேலியா ), ரிஷிகா (நோர்வே), கெளசாம்பிகா (பிரான்ஸ்), தானியா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று, பின்னர் பி.ப 12:00 மணியளவில் இருபாலை கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட.து.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 06:48)
