Mr. Krishnar Selvanayagam (Sellaththar)

Krishnar Selvanayagam (Sellaththar)

Deceased: 08 August 2024

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் செல்வநாயகம் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கதிரமலை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வேவியம்மா அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இராசமணி, நவரத்தினம், மகாலிங்கம், பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவா, அப்பு, துரை, புஸ்ப்பி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற காந்தன், நிசாந்தன், நிறோ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் 08-08-2024 நண்பகல் 12.00 மணியளவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, ஆலங்கன்று இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2024 04:00)