திரு. கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்)

(K.A.S புடவைகடை உரிமையாளர்)

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்)

தோற்றம்: 20 ஜூன் 1962 - மறைவு: 20 செப்டம்பர் 2024

யாழ். காரைநகர் மாப்பாணவூரினைப் பிறப்பிடமாகவும், ஓயார் சின்ன குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி-தெய்வநாயகி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுசியா அவர்களின் பாசமிகு கணவரும்,

கலை அனுசன், லோஜிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி, கந்தராசா, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகேஸ்வரி மற்றும் சாந்தராணி, ஜெகதீஸ்வரி, விமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்  

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2024 04:00)