Mr. Kulanayagham Mohan
(ஓய்வுபெற்ற பௌதீகவியல் ஆசிரியர் - யாழ். இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி)
Deceased: 10 October 2025
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலநாயகம் மோகன் அவர்கள் 10-10-2025) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலநாயகம் - விக்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, வாகீசன், காலஞ்சென்ற கபிலன் மற்றும் ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வஜீரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆராதனா, அதியன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
கலைச்செல்வி, அனுஷா, ஜாமினி, காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜேந்திரா, கேதாரநாதன், சத்தியசீலன் ஆகியோரின் மைத்துனனும்,
சங்கரி, தாரணி, ராகினி, வினோதினி, கீர்த்தனி, கேதாரன் ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காலை 09.30 மணியளவில் துண்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 61, புங்கன்குளம் வீதி,
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
