திருமதி. குழந்தை கவுண்டர் மங்கம்மா
தோற்றம்: 06 டிசம்பர் 1944 - மறைவு: 05 செப்டம்பர் 2024
இங்கிரிய-தும்பறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை இல-39/18, அல்விஸ் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கு.மங்கம்மா அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரப்பன் கவுண்டர்-பழனியம்மா தம்பதியினரின் மகளும்,
இந்தியா-நாமக்கல் ஜங்கமநாயக்கன்பட்டி சாமிகவுண்டர்-கருப்பாயி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தை கவுண்டர் (முன்னாள் உரிமையாளர்-59, செட்டியார் தெரு, சாப்பாட்டு கடை) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, லோகநாதன் (பிரித்தானியா), சரஸ்வதி, காளிதாஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சுப்பிரமணியம் S.K. அருண், மாலதி (பிரித்தானியா), பரமேஷ்வரி ஆகியோரின் மாமியாரும்,
அருணாசலம் (கந்து-இரத்தினபுரி), காலஞ்சென்ற பெரியசாமி (நாமக்கல்), பழனியம்மா, பழனியப்பன் ஆகியோரின் சகோதரியும்,
முத்தாயி (இந்தியா), காலஞ்சென்ற சின்னப்பன் கவுண்டர், கந்தசாமி கவுண்டர், பாப்பாயி, அங்கம்மா, நல்லையா கவுண்டர் ஆகியோரின் மைத்துனியும்,
மேனகா, லோஜினி, குகன் (பிரித்தானியா), Dr.சருபனா (சென்னை), விதுஷன் (அலங்கார் என்டர்பிரைஸ்) ஆகியோரின் அம்மம்மாவும்,
கவின் (பிரித்தானியா), திவ்யன் (பிரித்தானியா), ஓவியா (பிரித்தானியா), ஹிரேந்ரன், கிர்த்திக் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
