திரு குமரையா நாகநாதி (பொன்னம்பலம்)
தோற்றம்: 05 ஜனவரி 1935 - மறைவு: 03 மே 2022
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமரையா நாகநாதி அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சுருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வள்ளியம்மை, செல்லப்பா, தம்பிராசா, சோமசுந்தரம், கணபதிப்பிள்ளை(பரராஜசிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான, கயிலாயபிள்ளை , சோமசுந்தரம் மற்றும் பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவபாலன்(இலங்கை), தங்கலெட்சுமி, பூமணி, தங்கம்மா, பூங்காவனம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, இராகுலன்(கண்ணன்), பிரதீபன்(சுமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகுமார்(பாபு), ராதிகா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவி, பவித்திரன், பிரணவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சாயகி, பிரதுசன், அக்ஷ்யன், அகரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
