திருமதி. குமுதினி சிவசுப்பிரமணியம்

குமுதினி சிவசுப்பிரமணியம்

தோற்றம்: 29 அக்டோபர் 1942 - மறைவு: 13 ஆகஸ்ட் 2026

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமுதினி சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் (Benz மணியம்) அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மயூரதன், சிவசங்கரன், குறமகள், சிவகாந்தன், வேல்விழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகீதா, பாலகௌரி காலஞ்சென்ற சிவஞானசோதி, ஜீவ கௌரி, அருள்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுபஹரி மீனாட்சி, கோகுல், சிவராம், அருண்சிவா ஆகியோரின் அப்பம்மாவும்,

பிரணவன், பைரவி ஆகியோரின் அம்மம்மாவும்,

காயத்ரி சேனாதிராஜாவின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குறமகள்:- +94 77 900 7623

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2026 00:00)