Mrs. Leelavathy Thillainathan
(ஓய்வுநிலை ஆசிரியை - திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)
Date of Birth: 15 August 1940 - Deceased: 16 July 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 336, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தில்லைநாதன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ்.சங்கரப்பிள்ளை - செல்லம்மா (ஓய்வுநிலை அதிபர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் (ஓய்வுநிலை ஆங்கில விரிவுரையாளர் - கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம்) அவர்களின் அன்புத்துணைவியாரும்.
Dr. பாடினி (விசேட வைத்திய நிபுணர் - மாவட்ட பொது வைத்தியசாலை, திருகோணமலை) அன்புத் தாயாரும்,
Dr. ம. குகசீலனின் (விசேட கண்சத்திர சிகிச்சை நிபுணர் - தள வைத்தியசாலை, கந்தளாய்) அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ருக்மணி (ஓய்வுநிலை அதிபர் - திரு. மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி), தங்கராசா, கமலாவதி, நேசமணி (ஓய்வு நிலை ஆசிரியை - திரு. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வே.சிறிதரன், எஸ். சண்முகசுந்தரம், சா.வேலுப்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர் - திரு. ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம்), க. கிருபைதாசன்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஞ்சனா, அர்த்தனா (மாணவிகள் - திரு. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 587 5125
www.tamilthakaval.org
