திருமதி லோகநாயகி தங்கவடிவேல்
தோற்றம்: 19 ஜனவரி 1959 - மறைவு: 03 மே 2025
யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகநாயகி தங்கவடிவேல் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தங்கவடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோபிகா, சிவதாஸ் (பொறியியலாளர் - இலண்டன், பழைய மாணவன் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மணிவண்ணன் (ஆசிரியர் - மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
அபிராமின் பாசமிகு பேத்தியும்,
சயூத்பவானின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2025 திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டை பறிச்சான் இந்து மயானத்தில் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
