ஶ்ரீமதி. லோகேஸ்வரி நாகேந்திரக் குருக்கள் (சின்னமணி ஐயா)
தோற்றம்: 05 மே 1951 - மறைவு: 28 மார்ச் 2025
யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. லோகேஸ்வரி நகேந்திரக் குருக்கள் அவர்கள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மீனாட்சி - சுந்தரேஸ்வரக்குருக்கள் (கிராஞ்சியம்பதி சிவன்கோவில் தேவஸ்தான தர்மகத்தா) தம்பதியினரின் மகளும்,
நாகேந்திரக் குருக்கள் அவர்களின் பாரியாரும்,
காலஞ்சென்ற அருணோதயன் குருக்கள், ஹர்சினி ராகவா குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகஜ சர்மா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரது திருவுடல் புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியவில் இறுதி கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
