Mr M. Vaithilingampillai
Deceased: 21 February 2024
இந்தியா திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் கோனுடையான் கோத்திரம் M. வைத்திலிங்கம் பிள்ளை அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னார், தலாத்தோயா காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை - தெய்வானை அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
சரவணன், ஆனந்தன், முகுந்தன், திருமதி. அபிராமி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
ஷோபா,தனுஷா, திரு. அபிராமி, அர்விந்தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிராண்ட்பாஸ் காலஞ்சென்ற கிருஷ்ணசாமிப்பிள்ளை, ஊட்டன் எஸ்டேட் ஜெயராஜ் பிள்ளை, கண்டி பாலகிருஷ்ணன் பிள்ளை, திரு. பரராஜசிங்கம் ஆகியோரின் சம்பந்தியும்,
கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், உதயகுமார், விஸ்வநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
திருமதி. சிவபாக்கியம் தேவராஜன், காலஞ்சென்ற கமலம் பெரியண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேஹா, நரேஷ், ராகுல், மாதவ், அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டாவும்,
ஆர்யானவின் அன்புத் தாத்தவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-02-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை லோடஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு, 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பின் கனத்தை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
