Mrs. Maarkandu Rosemalar (Mallika)
Date of Birth: 11 November 1957 - Deceased: 02 September 2024
யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மார்க்கண்டு றோஸ்மலர் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று பாண்டியன்தாழ்வில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மாசிலாமணி-திரேசம்மா (பேபி) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்ரனி, யேசிலி (கனடா), அல்பிறட் (மைனர்), மெற்றலின் (மன்றாணி), காலஞ்சென்ற யேசுதாசன், வேதநாயகம் (பிரான்ஸ்), வசந்தகுமார் (பிரான்ஸ்), கிளேற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
70/5, கொழும்புத்துறை வீதி,
பாண்டியந்தாழ்வு, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
