திருமதி. மகேஸ்வரி கனகரத்தினம்
தோற்றம்: 16 அக்டோபர் 1939 - மறைவு: 19 டிசம்பர் 2023
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil யை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு-நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை-கனகம்மா கற்பகம் (அருளம்மா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் (மகோ முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் புவனேஸ்வரி, யோகேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, குகநேசன், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கிருஷ்ணபிள்ளை நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிரிஷ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சசிகலா (சுவிஸ்), இதயகலா (பிரான்ஸ்), சயந்தன் (சுவிஸ்), தயாபரன் (பிரான்ஸ்), இளங்கீரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணரத்தினம், தர்மரத்தினம், யனுசுயா, கௌரி, நர்மதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானா, நேத்ரா, ராகுல், கௌசிக், தீபக், பவின், மௌலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
www.tamilthakaval.org
