திரு நடராஜா மகேசன் (பாலா)
(யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்)
தோற்றம்: 16 மார்ச் 1941 - மறைவு: 01 நவம்பர் 2023
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், London பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேசன் அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகேசன் பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநாயகி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெகதீஸ்வரி (கனடா), சுசீலா (லண்டன்), சுகுமார் (லண்டன்), சகுந்தலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசுப்பிரமணியம் (கனடா), காலஞ்சென்ற குருமூர்த்தி (லண்டன்), சிவராஜா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்தினரும்,
காலஞ்சென்ற Dr. அருள்நாயகி, பாலசுப்பிரமணியம் (லண்டன்), சிவபாலன் - ராஜி (லண்டன்), சிவராமன் - ஆனந்தி (லண்டன்), சுந்தரநாயகி - நல்லைநாதன் (ஐக்கிய அமெரிக்கா)
தங்கவேலன் - சர்மிளா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி (கனடா)
பார்வைக்கு
www.tamilthakaval.org
