திருமதி. மகேஸ்வரி நல்லையா
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1943 - மறைவு: 12 ஜனவரி 2026
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - Wembley யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி நல்லையா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்.
சிவசுந்தரம், சத்தியபாமா, கந்தரூபன் (காந்தன் - இலண்டன்), லீலாதரன் (கரன் - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஷ்வரி, பூபாலமுரளி, நந்தினி (ஆவரங்கால், இலண்டன்), சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பனுஷன், பனுஜா, சஞ்சேகா, ஷைத், மிதுன், நிருஜன், நிருஜா, கஜானா, ஷமந்தா, மெருஜன், ரெஷ்னா, றாஜித், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஷ்விகாவின் பூட்டியும்,
காலஞ்சென்ற பரமேஷ்வரி, தங்கராஜா, செல்வராஜா, தவமலர், சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று காலை 6:30 - 8:00 மணி வரை Belmount Community Hall (Kenton Lane, HA3 8RZ) இல் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் Hendon Crematorium (Holders Hill Road, NW7 8RZ) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
