திருமதி. மகேஸ்வரி இராமலிங்கம்
தோற்றம்: 26 அக்டோபர் 1640 - மறைவு: 24 நவம்பர் 2025
யாழ். இருபாலை செண்டா வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, உடுப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி இராமலிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தையல்நாயகி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான விநாயகலிங்கம் - சோதி தம்பதியினரின் மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியலிங்கம், சுகந்தி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரியும்,
வித்தியாவதி, செந்தில்நாதன் ஆகியோரின் மாமியாரும்,
ரோசிதா, தருணிகா, கோசிகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
தேவி, நெல்லைலிங்கம், ரதி, அபயலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
