திருமதி. மகேஸ்வரி சிவலிங்கம்

மகேஸ்வரி சிவலிங்கம்

தோற்றம்: 10 ஜூன் 1943 - மறைவு: 17 ஏப்ரல் 2025

யாழ். புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-12 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவலிங்கம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணுத்துரை - கண்மணி தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்ளான நல்லதம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரி, சிவகலா, சிவகுமார், சிவநந்தினி, யதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாகூர், காலஞ்சென்ற ஜெயக்குமார், நிராகினி, சுவாதரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரிதாஸ், தர்மதாஸ் மற்றும் தேவதாஸ் (தேவகிரி என்டபிரைசஸ் உரிமையாளர், 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11, T.M.B. என்டபிரைசஸ் பங்காளர், 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, செல்லம்மா, பாக்கியம், முத்துலிங்கம் மற்றும் லோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

சோபநாத், அபிராமி, ரகுநாத், சோனியா, திவ்யா, சன்மிதா, சேயோன், சுவேத், ஆரதி, தன்விஹா, ரிகாஷ், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜேரியான், ஜெசிகா, ஆதித்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2025 04:00)