திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் (மணி)
தோற்றம்: 18 ஏப்ரல் 1940 - மறைவு: 18 ஏப்ரல் 2026
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று தனது 86வது வயதில் சாவகச்சேரியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - பகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குலேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வான்மதியின் (அவுஸ்திரேலியா) பாசமிகு தாயாரும்,
ஶ்ரீகுமாரின் மாமியாரும்,
அபிராமி, வைசாலி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, திரவியம், காந்திமதி, செல்வராஜா மற்றும் பவளராணி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசன், இராசேந்திரன், அருந்ததி, சந்திரபூபதி (ராணி), இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
குலேந்திரன் (கணவர்):- +94 77 272 0595
இராஜேந்திரன் (மைத்துனன்):- +94 77 548 7089
ரமணன் இராமச்சந்திரன் (பெறா மருமகன்):- +1 416 670 6467
www.tamilthakaval.org
