திருமதி. மல்லிகாதேவி தில்லைநாதன்
தோற்றம்: 21 ஏப்ரல் 1950 - மறைவு: 19 பெப்ரவரி 2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மல்லிகாதேவி தில்லைநாதன் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கவிதா (அமெரிக்கா), அரவிந்தன் (கனடா), திருமகள் ஆகியோரின் அன்பு தாயாரும்,
செந்தூரன் (அமெரிக்கா), அதுல்யா (கனடா), மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உமையாள் (அமெரிக்கா), ஆண்டாள் (அமெரிக்கா), கணதீப், தன்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அனிஷா (கனடா) பாசமிகு அப்பம்மாவும்,
கெங்காதேவி, இராஜகுலசிங்கம், கிருஷ்ணபகவான் ஆகியோரி்ன அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
