Mrs. Malligawathy Kandasamy
Date of Birth: 13 September 1939 - Deceased: 21 March 2025
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மல்லிகாவதி கந்தசாமி அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தசாமி (முன்னாள் பிரதம கணக்காய்வாளர் - பாதுகாப்பு அமைச்சு, முன்னாள் பொருளாளர் - அகில இலங்கை இந்து மாமன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மாணிக்கவதனி, சந்திரவதனி, முருகேஷ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சட்டத்தரணி டாக்டர் ராஜமோகன் (தலைவர் விவேகானந்த சபை), காலஞ்சென்ற நகுலேந்திரன், லலிதாகுமாரி, காயத்ரி ஆகயோரின் மாமியாரும்,
டாக்டர். ராஜ்பிரியதர்ஷினி, டாக்டர். ராஜ்ரமணன், ராஜ்ராகவன், லோஜினி, செந்தூரன், சுசிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷாலியின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-03-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் (இல-34/2A, எலிஹவுஸ் வீதி, கொழும்பு -15) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல். 10:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
