திருமதி. மங்கையர்க்கரசி செல்லையா
தோற்றம்: 26 ஜூலை 1928 - மறைவு: 17 ஜூலை 2021
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி செல்லையா அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மகளும்,
அம்பலவாணர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பலவாணர் செல்லையா (இளைப்பாறிய அதிபர், முன்னாள் வேலணை கிராமசபை தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசம்மா, சின்னம்மா, இராசையா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
,கமலாதேவி (பெறாமகள்), லோகநாயகம் (பெறாமகன்), கிருபாதேவி, ஜெயச்சந்திரன், மனோகரன், காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் மற்றும் வரதராஜன், சுகுமாரன், நளினி, சுதாகரன், சாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தம்பிராசா, தர்மபுத்திரி, திருச்செல்வம், ஆனந்தலீலா, வாமகேசி, சந்திரா, சுபாஷினி , தவபாலசிங்கம், இளஞ்செழியன் ஆகியோரின் மாமியாரும்,
யோகச்சந்திரன், ஜெகன்மோகன், கலைச்செல்வன், கலைச்செல்வி, பிரியங்கா, காயத்திரி, வைதேகி, கார்த்திகா, காருண்யா, லாவண்யா, ரம்யா, வினுஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கவிதா, ராகவன், ஆதவன், வினோத், வசீகரி, மதுரி, திவ்யா, கீர்த்தனா, திவாகரன், அர்ஜூன், அரவிந்த், யதுகுலன், சுபதா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரெண்டன், லோகன், மகிமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
