திரு. மாணிக்கம் கணபதிப்பிள்ளை
(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள - பொறியியலாளர்)
தோற்றம்: 16 செப்டம்பர் 1936 - மறைவு: 15 ஆகஸ்ட் 2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மாணிக்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
பண்டிதர் தம்பாப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணமலர் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சத்தியா தேவபாலன் (பிரித்தானியா), ஐங்கரன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
Dr. சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவயோகம், சிவஞானம், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, கமலாதேவி, கெங்காதரராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவபாலன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதிபன்சாயி, அரண்சாயி, இனியாள் வாணி ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 - 8:00 மணி வரை கல்கிசை பொது மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-08-2025 செவ்வாய்க்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் அளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
