திருமதி. மனோகரன் நளாயினி
தோற்றம்: 27 ஆகஸ்ட் 1974 - மறைவு: 14 பெப்ரவரி 2025
இல-249, கெலிஅமுன ரோட், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மனோகரன் நளாயினி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. பாலகுமார் தம்பதியினரின் அன்பு மகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹனோஜ், கிர்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
