திருமதி. மனோகரன் நளாயினி

மனோகரன் நளாயினி

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1974 - மறைவு: 14 பெப்ரவரி 2025

இல-249, கெலிஅமுன ரோட், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மனோகரன் நளாயினி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. பாலகுமார் தம்பதியினரின் அன்பு மகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹனோஜ், கிர்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 05:00)