திருமதி. மனோன்மணி கணேசநாதன்
தோற்றம்: 15 ஜூன் 1932 - மறைவு: 15 ஜூன் 2024
யாழ். வல்வை மண்ணைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானறு, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கணேசநாதன் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைசிற்றம்பலம்-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன்-பாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் கணேசநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திரு. தி. சுப்ரமணியம், திருமதி. செல்வரட்ணம் செல்வராஜா, திரு. தி. கோபாலவடிவேல், திருமதி. நேசமணி ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சௌதாமணி (லண்டன்), லலிதாமணி (கனடா), காலஞ்சென்ற ஜெகநாதன், ரங்கநாதன் (கனடா), காலஞ்சென்ற வனிதா மணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜேந்திரா, ரவிந்திரதாஸ், பரிமளா ஆகியோரின் மாமியாரும்,
ஜெகன், சௌமியா, சோபியா ஆகியோரின் பேரன்புமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் Tooting & Mitcham Community Sports Club Function Hall, Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF எனும் முகவரியில் நடைபெற்று, நண்பகல் 12.40 மணியளிவில் North East Surrey Crematorium, Cemetery Lodgem Lower Morden Ln, Morden SM4 4NU எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும். பின்னர் Tooting & Mitcham Community Sports Club Function Hall இல் இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
