திருமதி. மனோறஞ்சிதம் சிவசுப்ரமணியம் (Baba)

(ஆங்கில ஆசிரியை)

மனோறஞ்சிதம் சிவசுப்ரமணியம் (Baba)

தோற்றம்: 12 மார்ச் 1951 - மறைவு: 11 ஜனவரி 2023

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அச்சுவேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோறஞ்சிதம் சிவசுப்ரமணியம் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிறைசூடி, சிவரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற சபாரட்ணம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவாந்தி சுசீந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுசீந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜினோஷன், ஜெதீஷன், றஜீஷன், தேஜிஷன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

பானுமதி, மனோரஞ்சி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், நடேஸ்வரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகுமாரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தினேஷன், காலஞ்சென்ற சபேஷன், டினேஷ், றம்மியா, சதீஷ் ஆகியோரின் மாமியும்,

சறோஜினி, கமலாஷினி, நல்லாதான், கிருபா, பிரபா, சுகிர்தா, ஜெகதா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ENBAM AND SONS அரங்கம், கோம்பயன் மணல் மயான வீதி யாழ்ப்பாணத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது,

இறுதிக்கிரியை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ENBAM AND SONS அரங்கத்தில் நடைபெற்று கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2023 07:10)