யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனுவேற்பிள்ளை அருளப்பு அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சோமசுந்தரம் - திரேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லையா, மரியாம்பிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற மரியமதலேனா (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
லூசியா (சித்திரா - இலண்டன்), பமிலா (சந்திரா -இலண்டன்), இந்திரா (கனடா), செசிலியா, அல்பிறற் (செல்வம்), சுதாகர் (இலண்டன்), யேசுதாஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராஜன் (இலண்டன்), ஸ்ரிபன் (இலண்டன்), யேசுதாசன் (கனடா), றமேஸ், சாரதாதேவி, சோயினி (இலண்டன்), மாலினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரெல்லா, ஸ்ரெபான், டிலன், டன்சிசெறினா, டன்சன், ஸ்ரெபானி, யாஸ்மின், றோஷன், ஏற்றியன், சுபறம்யாஏற்றினி, விதுஷன், காணுஷன், யானுஷன், கபிலன், பற்றிக், யஸ்ரின், லவின், கவிஷா ஆகியோரின் பேரனும்,
சஸ்மிகா, சஸ்விக், கேலன், செரிக்கா, அமரிகாட்டர் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 13-11-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, ஏழாலை கிழக்கு, இசிதோர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

