திருமதி. மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை (மரியக்குட்டி)

மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை (மரியக்குட்டி)

தோற்றம்: 25 ஏப்ரல் 1936 - மறைவு: 02 ஜூலை 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இளவாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிளை சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பமிலா (இலங்கை), மரியநாயகி (ஜெமிலா- கனடா), பிலிப்ராசநாயகம் (ஜேர்மனி), ஜெயக்குமார் (பிரான்ஸ்), ராஜ்குமார் (ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார் (கனடா), பிறிணித்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், யூட்றஞ்சன், புஸ்பமலர் (பவா), தர்சினி, நிஷாந்தி, விஜித்தா, தேவராசா ஆகியோரின் அன்பு மாமியும்,

திரேஸ், அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சூசானம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசமணி, புனிதா, காலஞ்சென்றவர்களான ராசதுரை, அன்னம்மா, மரியம்மா (சாரம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவுட்றி, பேட்டா, வதனி, லக்கி, சூட்டி, ஜான்சன், யூடின் ஆகியோரின் பெரியம்மாவும்,

அஜந்தன், அனுஷா, அலெக்ஸ், அன்ரனி, பொன்னார், ராசா, பேபி, றூபி, சந்திரன், துரை சறோ, ரவி, றதி ஆகியோரின் ஆசை மாமியும்,

நில்மன்ராஜ்- பற்றிமா, பசில்ராஜ், றொபின்சன், ரஜீவன், றெக்ஸ்சன், எல்வர், ஜெறி, அகில், ஜெசிக்கா, ஜெனிவர், ஜெனுஷா, ஜேம்சன், அனுஷன், கிறிஸ்ரினா, தபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நயோமி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இளவாலை புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2022 00:17)