திரு. மாரியாபிள்ளை சிவலிங்கம்

மாரியாபிள்ளை சிவலிங்கம்

தோற்றம்: 07 ஏப்ரல் 1954 - மறைவு: 15 மே 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தை பூர்வமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரியாபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இரவு 8:10 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரியாபிள்ளை - ராசாத்தி அம்மாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கபிள்ளை (பண்டாரவளை) - ஜெயலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற தர்மாம்பாள் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுசி, அதித்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அணில்மோகனின் மாமனாரும்,

தர்மராணி (மாலா - மைத்துனி), விஸ்வநாதன் அவர்களின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 காலை 7:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2025 04:00)