Mr Markandu Baskaran
Date of Birth: 13 April 1973 - Deceased: 17 December 2023
கிளிநொச்சி பூநகரி செட்டியார் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம், ஜேர்மனி Singen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாஸ்கரன் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் காலமானார்.
அன்னார், மார்க்கண்டு, காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற யோகநாதன், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருணரூபினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஹபிலினி, திவிகன், யபினுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபன், காலஞ்சென்ற ஜனனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருணரூபன், றஜனி, அருணதீபன், அருள்ராஜ், அமல்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல-1/5, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
