திரு. மார்க்கண்டு பொன்னம்பலம்

மார்க்கண்டு பொன்னம்பலம்

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1957 - மறைவு: 20 ஜூலை 2024

யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜித்தா (லண்டன்), சாரதா (ஜேர்மன்), வனிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் - அட்டாளைச்சேனை), அம்பிகா (கொமர்ஷல் வங்கி-கொட்டாஞ்சேனை), வித்தியா (தாதி உத்தியோகத்தர்-திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

தரஷ்கானந் (லண்டன்), கேதீஸ்வரன் (ஜேர்மன்), முரளிதரன் (ஆசிரியர்- க.மு விபுலானந்தா தேசிய பாடசாலை, காரைதீவு), புவனேந்திரன் (கொமர்ஷல் வங்கி), சஜீபன் (தாதி உத்தியோகத்தர்- திருகோணமலை), தர்ஷன் (லண்டன் ), கபிசன் (லண்டன்), கனிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரன் (லண்டன்), சத்தியநாதன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2024 04:00)