திரு. மருதப்பிள்ளை புஷ்பநாதன்
(அஜந்தா ஸ்டோர்ஸ்)
தோற்றம்: 26 ஜூன் 1952 - மறைவு: 18 மே 2024
திரு. மருதப்பிள்ளை புஷ்பநாதன் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இரவு 7.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா- திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், முன்னாள் தலாத்து ஓயா காலஞ்சென்ற மருதப்பிள்ளை - தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மகனும்,
வத்துகாமம் காலஞ்சென்ற தைலான்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
திலகராணி அவர்களின் அன்புக்கணவரும்,
பிரவீணா, தனுஜா, மதுஷ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில் குமரன், விசாகச்செல்வன் ஆகியோரின் மாமனாரும்,
மிட்டாலி, செனாயா, செமாயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், கந்தசாமி, கைலாசவரதன், சரஸ்வதி ஆகியோரின் சகோதரனும்,
செல்வராணி, மோகன்ராஜ் காலஞ்சென்ற விஜயகுமார், பத்மராணி ஆகியோரின் மைத்துனரும்,
சோமசுந்தரம், காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் சகலையும்,
ரஞ்சனியின் மைத்துனரும்,
காலஞ்சென்ற மூக்கையாபிள்ளை, பரமேஸ்வரி, நல்லதம்பியாபிள்ளை, ஜெயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 20-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.20 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
