Mr. Maruthappu Selvarajah
Date of Birth: 20 June 1945 - Deceased: 24 June 2022
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வீரம்புளியடியை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Bremervörde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு செல்வராசா அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை (நெடுந்தீவு) வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முரசொலிமாறன் (மாறன்-ஜேர்மனி), பாமா (கண்ணா-சுவிஸ்), நளாயினி (கருனா-லண்டன்), மாலினி (மாலா-கனடா), சிறிமாறன் (சிறி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோகுலராணி (ஜேர்மனி), யாசோதரன் (சுவிஸ்), சிவகுருநாதர் (லண்டன்), காலஞ்சென்ற மதியழகன் மற்றும் இரஜிநிதி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானம்மா, தங்கரத்தினம், யோகம்மா, மகேஸ்வரி மற்றும் நாகரத்தினம் (மணியம்- இலங்கை), நடராசா (கந்தசாமி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், முருகேசு, தம்பாபிள்ளை, செல்வராசா மற்றும் சிவகாமிப்பிள்ளை (அம்மாச்சி- இலங்கை), காலஞ்சென்ற சித்திரா மற்றும் நாகம்மா (இலங்கை), காலஞ்சென்ற விசுவலிங்கம் (விசுவப்பா) மற்றும் மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கமலாம்பாள், ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அபிநயா, நிதர்சனா, ஆர்த்திகன், பிரசன்னா, அபூர்வன், விஸ்னுகா, கஜானுகன், ஆயிசா, ஆரங்கன், திசானன், நிதுசன் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களும் இறுதிக்கிரியைக்கு வருபவர்களும் Covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்திருத்தல் வேண்டும்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
