திருமதி. மேரி ராஜராஜேஸ்வரி ஜீலியஸ்
தோற்றம்: 29 ஜூன் 1947 - மறைவு: 25 ஆகஸ்ட் 2024
யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி ராஜராஜேஸ்வரி ஜீலியஸ் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை சேவியர்-அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான CAPT.H.M.பெனடிக்-திரேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஹென்றி ஜீலியஸ் பெனடிக் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெரி (ஐக்கிய இராச்சியம்), பிராங் (Seamen) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டிலுஸ்சினி (ஐக்கிய இராச்சியம்), சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நக்ஷான் (ஐக்கிய இராச்சியம்), துஷாரா (ஐக்கிய இராச்சியம்), டிரிஷான், அக்ஷான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
திரவியநாதன், காலஞ்சென்ற அன்ரன் பத்திமாநாயகம், பரமேஸ், மகேஸ், காலஞ்சென்ற யோகேஸ், ரஞ்சன், கமலா, ஜெயநாயகம், மங்களா ஆகியேராின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ரோஸ்மேரி தம்பிநாயகம், கிளெமன்ட் செல்வநாயகம், எட்வின் பெனடிக், எட்வேட் பெனடிக், கில்டா அந்தோனிசுவாமி மற்றும் பிலோமினா பிலிப், காலஞ்சென்ற அன்ரன் பெனடிக் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
