Mrs. Mauthamuthu Dhanalaxumi
Date of Birth: 05 February 1942 - Deceased: 09 July 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மருதமுத்து தனலக்ஷ்மி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாவு-செல்லம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாப்பம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற மருதமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
நாகரெத்தினம், சந்திரசேகர், முரளிதரன், செந்திமதி, விக்னராஜா, சண்முகராஜா, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பம்மா, எசக்கி, கனேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல- 10, 1ம் ஒழுங்கை பிறவுண் வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
