திரு. மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ்
தோற்றம்: 06 ஏப்ரல் 1956 - மறைவு: 14 ஜூன் 2024
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-மங்கையர்கரசி (சிரிமா) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்- இலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி (விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணரெத்தினம் (பிரான்ஸ்), சிவலிங்கநாதன் (சிங்கன்- சுவிஸ்), அரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லீலாவதி,செல்வராணி, காலஞ்சென்ற செளந்தரராசா, யோகராணி, புலேந்திரராசா, ஜெயந்திரராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிகரன், வினோதப்பிரியா (பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிகா (பிரான்ஸ்), கோகுலரமணன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரக்யா, பிரியன், சஷ்டிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
