திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் (காப்பியதாசன்)

(ஓய்வுபெற்ற ஆசிரியர்-புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம், வருகை விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம், கலாபூஷணம், B.Sc (Visual.com.in English), M.A.Tamil (Hons), JP)

மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் (காப்பியதாசன்)

தோற்றம்: 10 டிசம்பர் 1947 - மறைவு: 16 ஏப்ரல் 2024

யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நவரத்தினம் - பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும், குழந்தைவேலு - நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

மணிமார்பன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் - கல்வி அமைச்சு), ஆரணி (மருத்துவர் - நோர்வே), துளசிவர்மன் (முகாமைத்துவப் பணிப்பாளர் - Canopus Pvt Ltd) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தஜனி (தாதிய உத்தியோகத்தர்- யாழ் ​போதனா வைத்தியசாலை), நிர்மலன் (பொறியியலாளர் - நோர்வே), திர்சிகாயினி (B.Sc Agiculture) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அறிவரன், பகலோன், பாகவி, பாவலன், ஆதித்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், கதிர்காமேஸ்வரன், செந்திலேஸ்வரன், கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரியம்மா, இரத்தினேஸ்வரி, இந்திராணி, திருக்கேதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரியம்மா, ஏகாம்பரம், தியாகராசா, இராசம்மா, பரமேஸ்வரி, கமலாசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2024 04:00)