Mr. Murugesu Balasingam
(Retired Ceylon Electricity Board Officer)
Date of Birth: 12 April 1936 - Deceased: 31 July 2022
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
இராசபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
மாணிக்கரஜினி (லண்டன்), முருகரவி (சுவிஸ்), கபிலரவி (சுவிஸ்), காலஞ்சென்ற விஜயரவி, கலாரஜினி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பூமணி, தங்கமணி, இராசமணி, கந்தசாமி மற்றும் துரைசிங்கம், இராசரத்தினம், காலஞ்சென்ற கனரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், மயில்வாகனம், சோமசுந்தரம், வைத்திலிங்கம், ஆறுமுகம் மற்றும் மல்லிகாதேவி, சிவமணி, தையல்நாயகி, ஜெயவசந்தா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,
பாலசிங்கம் (லண்டன்), வசந்தி (சுவிஸ்), ரஞ்சிதகுமாரி (சுவிஸ்), மகேந்திரராஜா (நர்மதா ஜுவல்ஸ், கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அரவிந்தன், பாலினி, பானுஜன், பானுகா, சஞ்ஜிகா, வேனுஜா, ராகுல் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
விதுஷன், விதுகரன், வினுசா, அனுசன், கார்த்திகா, ராகுலன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மட்டுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
