திரு. முருகேசு சிற்றம்பலம்
தோற்றம்: 21 டிசம்பர் 1943 - மறைவு: 28 ஜூன் 2023
யாழ் கரவெட்டி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் வவுனியாவின் பிரபல மூத்த சட்டத்தரணியும், காலஞ்சென்ற முன்னாள் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரும், உடுப்பிட்டி சிங்கம் என அழைக்கப்படும் திரு. சிவசிதம்பரம் அவர்களின் சகோதரருமான திரு. சிற்றம்பலம் அவர்கள் 28-06-2023ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
வவுனியாவின் மூத்த சட்டவாளர், அரசியலாளர், முன்னாள் மாவட்டசபைத் தலைவர், மாவீரன் பண்டாரவன்னியன் திருவுருவத்தை நிறுவுவதற்கு காரணகர்த்தா, பேரம்பேசாமல் அனைவரதும் சட்டத்தேவையை குறிப்பாக ஏழைமக்களின் சட்டத்தேவையை மனம் சுழிக்காமல் செய்தவர் இன்னும் அவரது சேவையை சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழர் அரசியல் வரலாறு தெரிந்த அனுபவசாலி. எமது தந்தையாரின் வயது வித்தியாசங்களிற்கு அப்பாற்பட்ட நண்பன், சட்டவாளர். அன்னாரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது!
ஆழ்ந்த அனுதாபங்கள், துயர்பகிர்கிறோம்.
இவர் ஓர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார்.
அன்னார் தனது 79வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைமையில் இன்று 28-06-2023ம் திகதி சிவதபதமடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2023ம் தகதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என அறியத்தருகிறோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2023 21:41)
