திரு. முருகுப்பிள்ளை இராமநாதன்
(Retired Director Development Finance - Central Bank)
தோற்றம்: 01 செப்டம்பர் 1941 - மறைவு: 14 பெப்ரவரி 2025
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகமலர் (Retired School Principal) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சுகந்தி (அவுஸ்திரேலியா), ரமேஷ் (NDB Bank) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr.பிரசாந்த், தனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மநாதன், காலஞ்சென்ற பத்மாவதி, செந்தில்நாதன், செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Dr. அர்ச்சனா, தர்னீஷ், திவ்யேஷ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
