திரு. முத்தையா பத்மநாபன்
(B.Sc- St.Paul's Calcutta University, DipEd(Sri Lanka), GCE(O/L)- மாணவர் பெளதிகம் பாடப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர், அதிபர்- அராலி மகா வித்தியா)
தோற்றம்: 22 ஏப்ரல் 1933 - மறைவு: 11 ஜூன் 2021
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Sokoto, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பத்மநாபன் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன் (பிரித்தானியா), பிரணவசொரூபி (அவுஸ்திரேலியா), மதிவண்ணன் (அவுஸ்திரேலியா), ஜெயசொரூபி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோசலாதேவி (பிரித்தானியா), சுரேஷன் (அவுஸ்திரேலியா), ஷர்மிலி (அவுஸ்திரேலியா), சங்கர் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ராசநாயகம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிவலோகநாதன்(இலங்கை), சுப்பிரமணியம்(நியூசிலாந்து), ரஞ்சனாதேவி(அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா), ராஜசிங்கம்(பிரித்தானியா), அமிர்தாதேவி(பிரித்தானியா), ஜெயரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரன், நளாயினி, திருத்தணிகாசலம் ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,
அர்ச்சணா, அபிராமி, சிவராம், அரவிந்த், அஞ்சலி, மகேஷ், கிருஷ்ணா, ஹரினி, அர்ச்சுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Conference:-Click here
www.tamilthakaval.org
