திரு. முத்தையாபிள்ளை ராமநாதன்
தோற்றம்: 28 டிசம்பர் 1955 - மறைவு: 03 செப்டம்பர் 2025
கொழும்பைச் சேர்ந்த திரு. முத்தையாபிள்ளை ராமநாதன் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் ஓமந்தூர் கிராமம் சமயமந்திரி கோத்திரம் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை - தனலக்ஸ்மி தம்பதியினரின் மருமகனும்,
தமிழ்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தினுஷாந்தின் (கனடா) பாசமிகு தந்தையும்,
ராஜமணி (ஜெயலக்ஸ்மி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (நித்தியகல்யாணி ஜீவலர்ஸ் - வெள்ளவத்தை) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளையின் மச்சானும்,
ஜானகியின் கொழுந்தனாரும்,
பிருந்தாவின் (கனடா) மாமனாரும்,
செந்தில்ராஜா - கங்காகுமாரி (கல்கிசை) ஆகியோரின் சம்பந்தியும்,
சேகர், மோகனசுந்தரம், தமிழ்கொடி, மகேஸ்வரி, ரஞ்சிதா ஆகியோரின் மைத்துனரும்,
கந்தசாமி, புஸ்பராஜ், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:15 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
