திரு. முத்தையா தங்கவேலாயுதம்
மறைவு: 04 அக்டோபர் 2025
யாழ். சங்கானை அம்பிகாவத்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சம்பந்தர் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபசீலன் (ஆசிரியர் - யாழ். இந்துக்கல்லூரி), பிருந்தாகரன் (பிரதேச செயலர் - கண்டாவளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஞானரத்தினம் அவர்களின் அன்பு சகோதரனும்,
சங்கீதா (ஆசிரியை - முத்துத்தம்பி மகாவித்தியாலயம் திருநெல்வேலி), சியானி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜயமிதா, கோபிகன், ஆகர்ஷா, ஆதர்சனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
