Mr. Muththukumar Thangarajah
(Owner - Angalin Textiles)
Deceased: 10 August 2025
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாக கொண்ட திரு. முத்துக்குமார் தங்கராஜா அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் கந்தனின் திருவடிகளில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நகுலாவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
தவமலர் (மலர்), தவக்குமார் (ராஜன்), தவநேசன் (நேசன்), தவப்பிரபாகி (பிரபா ), தவரஜினி (ரஜனி) ஆகியோரின் பாசமுள்ள அப்பாவும்,
ஜன்ஸ்டின்ராஜ் (சணா), மோகனரூபி, கிரிஜா, ஜெனந்தன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
ஹில்மன், அஷ்வினி, கீர்த்தனன், சாருவிஜா, விஷ்ணு, ஐஸ்வர்யா, அகர்ணியா, கரிசனன், பிரகஜன், அஸ்விதா, அஜிசனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் அன்னாரது கல்வியங்காடு மடத்தடி ஒழுங்கை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
