திரு முத்துக்குமாரு சண்முகசுந்தரம்

(இளைப்பாறிய யாழ் மாவட்ட முகாமையாளர்- இலங்கைவங்கி)

முத்துக்குமாரு சண்முகசுந்தரம்

தோற்றம்: 23 ஜனவரி 1936 - மறைவு: 01 அக்டோபர் 2019


 

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிறவுன் வீதி, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சண்முகசுந்தரம் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தையலம்பாள் தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கோவிந்தராஜா கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்திபன், ஜெயஸ்ரீ, சாருமதி, ஸ்ரீகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செண்பகலெட்சுமி, காலஞ்சென்ற திவ்வியமணி, ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரூபி, ஜெயகரன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையா, ஜெகதீசன், ஜெகநாதன், ஜெகன்மோகன், சந்திரமோகன், ராஜமோகன், தேவிகாராணி, சந்திரகலா, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரம்யா, மதுரா, சேந்தன், பிரவீன், ஆதர்சினி, ஆரபி, அபிஷா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12.00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சண்முகராணி - மனைவி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2019 00:34)