திரு. முத்துத்தம்பி யோகரட்ணம் (வவா)
தோற்றம்: 21 செப்டம்பர் 1952 - மறைவு: 12 டிசம்பர் 2024
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துத்தம்பி யோகரட்ணம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவயோகம், யோகராசா, யோகராணி (மட்டுவில் தெற்கு), யோகீஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அன்னலட்சுமி (ஜேர்மனி), குணமணி (மட்டுவில் தெற்கு) ஆகியோரின் அன்புக் கணவரும்,
பகீரதி (இலண்டன்), வாசுகி (நெதர்லாந்து), றஜீவன் (ஜேர்மனி), சதீஸ்குமார் (பிரான்ஸ்), துஷாந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதன் (இலண்டன்), பார்த்தீபன் (நெதர்லாந்து), சுனித்தா (ஜேர்மனி), பொம்மி (பிரான்ஸ்), கௌசிகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,
சௌமியா, றொசானா, டிசான் (இலண்டன்), அனுஜன், அனுசா, சுகி (நெதர்லாந்து), றஸ்வன், ஹர்வின் (ஜேர்மனி), அஹானா, அஸ்னா (பிரான்ஸ்), கிலான் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
