திரு. ந.சதாசிவம்
தோற்றம்: 24 பெப்ரவரி 1950 - மறைவு: 17 ஜூலை 2024
இந்தியா-திருச்சி மாவட்டம், தெற்கு சிறுப்பத்தூர் திரு. ந. சதாசிவம் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,
கட்டுக்குத்தானை காலஞ்சென்றவர்களான பெரியாசமிபிள்ளை-சிலம்பாயி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யஷாந்தன், சகிலா ஆகியோரின் தந்தையும்,
யோக (யுனைடட் பார்மசி-வௌ்ளவத்தை) அவர்களின் மாமனாரும்,
வைத்திலிங்கம் (ஜெயந்தி டெக்ஸ்டைல்ஸ்-கொழும்பு), உதயகுமார் (திருச்சி), சௌந்தராஜ் (கொழும்பு) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற தனபாக்கியம் அவர்களின் கொழுந்தனாரும்,
காலஞ்சென்ற தேவராஜ் (திருச்சி) அவர்களின் சகலையும்,
யஸ்வினா, நிலேஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் 18-07-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
