திரு. நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி (தேவா)

(உரிமையாளர் - திவாகர் ஜீவலரி (192, செட்டியார் தெரு, கொழும்பு-11)

நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி (தேவா)

தோற்றம்: 30 அக்டோபர் 1961 - மறைவு: 15 மே 2024

திரு. நடராஜன் மகேஸ்வரன் ஆச்சாரி அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜன் - முத்துலெச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கவேல் - மீனாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

திவாகர், நரேஸ், சஜந்த் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

ஊர்மிளா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அயல்கா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக  இல-54, எலிஹவுஸ் ஒழுங்கை, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு - 15 இல் வைக்கப்பட்டு, 18-05-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2024 04:00)