திரு. நடராஜா ஜெயராஜா
(Retd. Supervisor- Ceylon Petroleum Corp & Aramco)
தோற்றம்: 31 ஆகஸ்ட் 1943 - மறைவு: 10 அக்டோபர் 2022
யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், அத்தியடியைச் சேர்த்த காலஞ்சென்றவர்களான நடராஜா மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் வள்ளியம்மை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனாத்தனன் (ஐக்கிய அமெரிக்கா), யதுநந்தனன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெயநந்தனன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமுதினி, வாணி, சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சனா, அபிநயா, கவின், வெண்பா, நிலவன் ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, ஜெயமணி மற்றும் ஜெயபாலன், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், ஜெயசிங்கம் மற்றும் ஜெயமலர் ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
நாகலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன், தேவகி, ரத்னராணி, ஜெயந்தன், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, இராமலிங்கம், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, மோகனச்சந்திரன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
www.tamilthakaval.org
